சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வயது-117

13 June 2025

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 117 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரூ.770 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் வாகனத்திற்கு இடம் அமைக்கும் பணி வருகிற அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகத்திட்டம் ஒப்படைக்கப்பட உள்ளது. 100 ஆண்டு கடந்து மக்களுக்கு சிறப்பான முறையில் இந்த ரயில் நிலையம் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி என்று தென் மாவட்ட மக்கள் தினசரி இந்த ரயில் நிலையத்துக்கு சாரை சாரையாக வருகை தந்து பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.