தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மூலம் இரத்ததான முகாம் நடைபெற்றது

14 November 2021

திருச்சி ரவுண்ட் டேபிள் 54, திருச்சி லேடிஸ் சர்க்கிள் 33 மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தஞ்சை திருச்சி சாலையில் உள்ள வேல்முருகன் ஹெவி இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மூலம் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வெல்முருகன் இண்டஸ்ட்ரீஸ் அலுவலர்கள்,  தொழிலாளர்கள் மற்றும் திருச்சி ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் சுமார் 100 பேர் இரத்ததானம் செய்தனர்.  இம்முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்டக் குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் வேல்முருகன் தலைமை தாங்கினார். திருச்சி ரவுண்ட் டேபிள் தலைவர் திரு கார்த்திகேயன், திருச்சி லேடிஸ் சர்க்கிள் தலைவி யாமினி கார்த்திகேயன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் முத்துக்குமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.