தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கோவில் அடிமை நிறுத்தம் இயக்கத்தை தடை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

17 April 2021



 
ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவின் தலைமையில் கோவில் அடிமை நிறுத்தி இயக்கம் செயல்பட்டு வருகிறது தமிழக அரசின் அற நிலைய  துறையிலிருந்து தமிழக கோவில்களை விடுவித்து தனியாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனுமதி இல்லாமல் தஞ்சை பெரியகோவிலுக்குள்கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதை கண்டித்து தமிழக கோவில்களை ஜக்கி வாசுதேவ் கைப்பற்ற முயல்வதாகவும் அதை கண்டித்தும் வனப் பகுதிகளை ஆக்கிரமித்து ஈஷா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவ் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கைப்பற்றியிருக்கும் வனப் பகுதிகளை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி தஞ்சை தபால் நிலையம் முன்பு சி.பி.ஐ. (எம்) மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி சொக்காரவி மற்றும் அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது