ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மரணம் அடைந்ததற்காக முறைப்படி சீர் !
29 October 2020
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மரணம் அடைந்ததற்காக முறைப்படி சீர் !
27.10.2020 திருவில்லிப்புத்தூர்
பெருமள்சேரியைச் சார்ந்த பழனிக்குமார் தாயார் சுந்தரம்மாள் மறைவிற்கு
ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக சுந்தரம்மாள் இறுதி சடங்கிற்காக மாலை, புடவை, பச்சரிசி, மஞ்சள்தூள், கொல்லிக்கட்டை ஆகியவைகளை தேவேந்திரகுல வேளாளர் சமூக ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.
(ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடக்கும் வேளையில் வேளாண் குடியைச் சேர்ந்த இரு ஊரைச் சேர்ந்த பள்ளர்கள் தடி போடுவார்கள் மற்றும் நானல் புள் மூங்கில்களை வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கொண்டு வருவார்கள் என்பது ஐதீகம் இதனால் இவர்களுக்குகான மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது)