திருவாரூரில் மறைந்த ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்.பி.ஸ்ரீனிவாசன் காவல் மரியாதை

24 June 2021


திருவாரூரில் மறைந்த ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்.பி.ஸ்ரீனிவாசன் மலர்வளையம் வைத்து காவல் மரியாதை செய்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி மருதவனம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் எஸ் சின்னச்சாமி இவர் திருவாரூர் மாவட்ட காவல்துறையில் ஊர்காவல் படை காவலராக கடந்த 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் இவர் புற்றுநோய் காரணமாக கடந்த 23 ஆம் தேதி இறந்தார். இதனையடுத்து அவரது சொந்த ஊரில் அவரது உடல் நல்லடக்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன் இறந்த காவலர் சின்னச்சாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து காவல் மரியாதை செய்தார். மேலும் இறந்த காவலர் சின்னச்சாமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.25-ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார். இதில் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் மீனா திருவாரூர்