கோவை ராமசாமி நகரில் வரசித்தி விநாயகர் கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர தின சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் !

23 July 2021

கோவை ராமசாமி நகரில் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில்  அமையப்பெற்ற ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர தின  சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது…

கோவை காமராஜர் ரோடு,ராமசாமி  நகர் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அந்த பகுதி பக்தர்களால் Foreign விநாயகர் என அழைக்கப்படுகிறார்.இந்நிலையில் ஆடி மாத துவக்கத்தை முன்னிட்டு,சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.இதில் அதே வளாகத்தில் புதிதாக அமையபெற்றஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திர தின  சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. காலையில்   சாமிக்கு அபிஷேக ஆராதனையும்,தொடர்ந்து மாலை சிறப்பாக அமைக்கப்பட்ட  யாக குண்ட சாலையில் ஹோமம் வளர்த்து  பூஜைகள்  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு,பின்னர் மூலவருக்கு பால், தயிர், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதனை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயரின் திருநட்சத்திரம் மூலம். இந்த நாளில் செய்யப்படும் சிறப்பு வழிபாடுகளால் பொதுமக்கள் நல்ல பலனை அடையமுடியும் எனவும்,மேலும் இங்கு பிரத்யேகமாக உள்ள ராசித்தோட்டம் நல்ல ஆன்மீக உணர்வை தருவதாகவும், கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதில் எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன் நலக்குழு,சான்வி அபார்ட்மென்ட்ஸ் ,ஜோதி நகர் உட்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.