சர்க்கரை நோயாளிகளின் கிட்னி கெட்டு போகாமலிருக்க எட்டு வழிகள்

01 January 2022

சிறுநீர் உருவாக மற்றும் வெளியேற காரணமாக இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள், யூரட்டர் எனப்படும் குழாய்கள், ப்ளாடர், இவற்றை கட்டுப்படுத்தும் தசைகள், நரம்புகள் இவற்றை சிறுநீரக மண்டலம் என்கிறோம்.

சிறுநீரக மண்டலமானது, நுரையீரல், சருமம், குடல் இவற்றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாதுப்பொருட்களை சமன் செய்கிறது.18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார். ஆனால் பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொறுத்தும் இந்த அளவு வேறுபடலாம். சிலவகையான மருந்துகளாலும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுகிறது.


சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, குடும்பத்தில் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம்.உடலில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். உணவு மற்றும் செரிமான அமைப்பை அனைத்து அசுத்தங்களிலிருந்தும் தெளிவாக வைத்திருக்க கழிவுப்பொருள்களை வடிகட்டுதம் மற்றும் வெளியேற்றுதல் போன்ற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது.உடலில் முக்கிய உறுப்புகளின் சரியான செயல்பாடுகளுக்கு ஆரோக்கியமான உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவு நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அடிப்படையில் கூட ஆரோக்கியத்தை உண்டு செய்யலாம். அல்லது குணப்படுத்தலாம்.​நாள்பட்ட சிறுநீரக நோய்சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட இதயம் மற்றும் நரம்பியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நாள்பட்ட கோளாறுகளை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு உதவும் என்பதை மறுக்க முடியாது.சர்க்கரை பிரச்சனை கொண்டிருப்பவர்கள் அன்றாட உணவை சில ஆரோக்கியமான உணவுகளுடன் மாற்றியமைப்பதன் மூலம் சிறுநீரகங்களின் நிலையை மேம்படுத்த செய்யும்.சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது?இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை சிலவகையான மருந்துகளால் தடுக்க முடியும். இது குறித்து மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.உங்கள் உடல் பிரச்சினைகளுக்கேற்ப சரியான உணவுகளை உட்கொள்ளவும். உணவு நிபுணர் (Dietician) ஆலோசனை பெறுவது நல்லது.வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்துக் கொள்ளவும்.வலி மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்ள வேண்டி இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளவும்.சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.