ஒரு நாட்டுக்கு இரு கொடிகள் இருக்க முடியாது-காஷ்மீர் கொடி விவகாரத்தில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

26 October 2020

ஒரு நாட்டிற்கு இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்று காஷ்மீர் கொடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மேஜையில் இருந்த
ஜம்மு காஷ்மீர் கொடியை காட்டி இது தான் எனது கொடி என்றார்.

இந்த கொடி மீண்டும் எப்போது வருகிறதோ அப்போது தான் இந்திய தேசிய கொடியை ஏற்றுவோம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ரவிசங்கர் பிரசாத், ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். இந்திய மூவர்ணக்கொடிதான் அனைத்து பகுதிகளும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.