சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் பரபரப்பான பழையநன்னாவரம் கிராமம்

18 October 2021

சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் பரபரப்பான பழையநன்னாவரம் கிராமம்... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பழைய நன்னாவரம் கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதில் பேரம் பேசப்பட்ட நிலையில் பழைய நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற சு.பாபு என்பவர் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டி வெற்றிபெற்ற சக உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாக தகவல் இதில் அனுசுயா என்கிற என்கிற உறுப்பினர் பணத்தை வாங்க மறுத்ததோடு அவர் வீட்டில் வைத்துவிட்டு வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை எடுத்துவந்து 5-ஆவது வார்டு உறுப்பினர் பாபு அவர்களின் வீட்டில் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளார் அதை அவர் வாங்க மறுத்ததால் அவர் எடுத்து வந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை அவர் வீட்டு வாசல் முன்பு போட்டு விட்டு சென்று விட்டார். சாலையில் பணம் கிடைப்பது கண்டதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்