ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிப்பு - புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி

26 July 2021


டோக்கியோோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்புடைய 16 பேருக்கு அங்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148-ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே, பயிற்சியாளர் மற்றும் வீரருக்கு கொரோனா உறுதியானதால் நெதர்லாந்து துடுப்புப் படகு அணி, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளது.