கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ

08 March 2021

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கூ பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்லூர் ராஜூ இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ-க்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜூ-க்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.