வியாபாரிகளுக்கு கட்டாய தடுப்பூசி: வட்டாட்சியர் அறிவிப்பு

10 September 2021



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் தவறும் பட்சத்தில் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டாட்சியர் கி. திருநாவுக்கரசு, டிஎஸ்பி வெ. விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி ஆணையர்  டி. உஷாராணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.