உள்ளாட்சித் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் எ.வா. வேலு

05 October 2021

உளுந்தூர்பேட்டை அருகே பல்லவாடி, எறையூர் , புகைப்பட்டி , எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை  உள்ளாட்சித் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலு அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஊராட்சி மன்றத் தலைவர்களும் அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் என்றும் பேசினார்.

கொற்றவை செயதிகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்