மதுரையை சிட்னி போன்று மாற்றுவேன் - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

09 March 2021

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்லூர் ராஜூ நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ-க்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

 அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
மதுரையில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவேன். யார் என்னை கிண்டல் செய்தாலும் நிச்சயமாக மதுரையை சிட்னியாக, மெல்போர்னாக மாற்ற எனது எதிர்கால நடவடிக்கை இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். மதுரை மாநகர் மிகப்பெரிய எழுச்சிமிக்க மாநகராக மாறும். 

மேலும் மு.க. அழகிரியின் ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நல்லவர்களிடம் எப்போதும் ஆதரவு கேட்பேன் என்று அமைச்சர் பதிலளித்தார். 

இவ்வாறு அவர் கூறினார்.