கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் கரை ஒதுங்கிய டால்பின் உயிரிழப்பு

24 January 2022

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய டால்பின்கள். கரை ஒதுங்கிய டால்பின்களில் ஒரு டால்பின் உயிரிழப்புகன்னியாகுமரி சன்செட் பகுதியில் கோவளம் மீனவ கிராமம் உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் நேற்று மாலை இரண்டு டால்பின்கள் உயிருக்கு போராடிய நிலையில் கரைஒதுங்கின.உயிருக்கு போராடிய டால்பின்களில் ஒன்று சிறிது நேரத்தில் உயிரிழந்தது. உயிருக்கு போராடி வந்த நிலையில் இருந்த மற்றொரு டால்பினை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கடலுக்குள் திரும்பவிட்டனர்.நேரம் செல்ல செல்ல அந்தக் கடற்கரை ஓரத்தில் டால்பின்கள், கூட்டம் கூட்டமாக கடற்கரையில் நீந்தியவாறு அங்குமிங்குமாக சென்றுகொண்டிருந்தன. இதனைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு கூடினர்.பின்னர் இது குறித்து வனத்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் வனச்சரகர் திலீபன் உத்தரவின்படி வனக்காப்பாளர் பிரபாகர் மற்றும் காவலர்கள் வந்து இறந்த டால்பினை எடுத்துசென்றனர்.இதனை உடற்கூறு பரிசோதனை செய்து இந்த டால்பின் எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும என வனத்துறையினர் தெரிவித்தனர்