சென்னைக்கு ஆபத்து. . . தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

29 November 2021

சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து நிலையில் மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.வெள்ள மழைநீரில் இருந்து மீண்டு சென்னை மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது வெதர்மேன் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.