விமானத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைவிட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது சில பயணிகளுக்கு உரிய டிக்கெட் இருந்தாலும் அனுமதி மறுக்கப்படும்.
இப்படி நிகழும்போது, அந்த பயணிக்கு 24 மணி நேரத்துக்குள் மாற்று ஏற்பாடு செய்து தருவதுடன் கால தாமதத்துக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றவில்லை என்று கூறி ஏர் இந்தியாவுக்கு விமான போக்குவரத்துக் கழகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், இப்பிரச்சினையை சீக்கிரமே தீர்க்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியாவை விமான போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.