அதிமுக 50 வது பொன்விழா ஆண்டு.....

18 October 2021



அதிமுக 50 வது பொன்விழா ஆண்டு.....சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவினர் எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை.....


தமிழகத்தில் அதிமுக தொடங்கி 50வது ஆண்டு பொன் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எழுச்சியாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் தலைமையில் சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர்
எம்ஜிஆர் மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாஜலம் மாலை அணிவித்து மரியாதை செய்த இந்த நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல் ரவிச்சந்திரன் என கட்சி நிர்வாகிகள் பங்க் வெங்கடாஜலம் யாதவ மூர்த்தி, ஜமுனாராணி, உமாராணி உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம்.
எஸ் கே சுரேஷ் பாபு.