2021 ஐபிஎல் தொடரில் 9-வது புதிய அணி சேர்ப்பு; நடிகர் மோகன்லால் வாங்கவிருப்பதாக தகவல்

14 November 2020

சமீபத்தில் துபாய் அமீரகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மே, ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் புதியதாக அகமதாபாத் பெயரை கொண்டு ஒரு அணியை சேர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில் இந்த அணியை பிரபல நடிகர் மோகன்லால் வாங்கவிருப்பதாகவும் அதற்கான பணிகளுக்காக தான் மோகன்லால் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் இறுதி சுற்றை மோகன்லால் நேரில் சென்று ரசித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பிரபல கல்வி செயலி நிறுவனத்துடன் இணைந்து இந்த அணியை வாங்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதுவரை ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகிய திரையுலக பிரபலங்கள் ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ள நிலையில் ஒரு தென்னிந்திய நடிகர் ஐபிஎல் அணியை வாங்கவிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.