மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் உயிரிழந்தனர்

09 April 2021

மராட்டியத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. அதன்படி புதிதாக 56 ஆயிரத்து 286 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். இதனால் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்து 29 ஆயிரத்து 547 ஆக உயர்ந்தது.

அதேவேளையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சம் அடைந்தது. அதன்படி ஒரே நாளில் 376 பேர் பலியானார்கள். இதுநாள் வரையில் இதுவே அதிகப்பட்ச பலி எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

தற்போது மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி 5 லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்