சிலிண்டர் லாரி விபத்து தீ...ப்பிழம்புகளுடன் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்

12 November 2025

அரியலூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துள்​ளானது. அப்​போது, சமையல் காஸ் சிலிண்டர்​கள் வெடித்​துச் சிதறியதால் பரபரப்பு 
ஏற்​பட்டது.  திருச்​சி​யில் இருந்து சமையல் காஸ் சிலிண்​டர்​களை ஏற்​றிக்​கொண்டு லாரி ஒன்று நேற்று முன்​தினம் இரவு அரியலூருக்​குப் புறப்​பட்​டது. திருச்சி இனாம்​குளத்​தூர் பகு​தியை சேர்ந்த கனக​ராஜ்(34) லாரியை ஓட்​டி​னார்.
நேற்று காலை 6.40 மணி​யள​வில் வாரண​வாசியை அடுத்த விநாயகர் கோயில் வளை​வில் திரும்​பிய​போது, திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த லாரி சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில், சிலிண்​டர்​கள் ஒன்​றோடு ஒன்று உரசி​ய​தால் தீப்​பற்றி எரி​யத் தொடங்​கி, வெடித்​துச் சிதறின. 
ஓட்​டுநர் கனக​ராஜ் காயத்​துடன் அங்​கிருந்து தப்​பி​னார்.
தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்​கள் தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். கூடு​தலாக திருமானூர், பெரம்​பலூர், செந்​துறை மற்​றும் ஜெயங்​கொண்​டம் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் தீயணைப்ப
வாக​னங்​கள் வரவழைக்​கப்​பட்​டன. சுமார் 3 மணி நேரத்​துக்கு பிறகு தீ அணைக்​கப்​பட்டு கட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டது.


மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்