தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்

24 January 2026

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை அபிஷேக் (22) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 19 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவஞானம் (57) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.