வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிர் இழப்பு.

05 December 2025

ஈரோடு பிபி அக்ரகாரம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35) இவரது மனைவி மகாலட்சுமி இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் சாய்சரண் என்ற மகனும் ரெண்டு வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில்
3-12-2025.இரவு மகா லட்சுமி குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வாழைப்பழம் வாங்கி வந்து சேர்ந்தார் பின்பு குழந்தைகள் சாப்பிட பழத்தை கொடுத்துள்ளார். குழந்தைகள் பழத்தை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென சாய்சரனின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கித் தவிக்கிறது அவன் மூச்சு விட சிரமப்பட்டான். மேலும் அவனுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
மூச்சு விட முடியாமல் சாய்சரண் துடிப்பதை பார்த்த பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் சென்றனர் 
அங்கு சாய்சரணை பரிசோதித்த டாக்டர்கள் சாய்சரண் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர் இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழைப்பழம் சாப்பிட்டதால் ஐந்து வயது சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.