6 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை சட்டமன்ற கொடியசைத்து தொடங்கி வைத்தார்....‌

15 December 2025

உளுந்தூர்பேட்டையில் 6 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை சட்டமன்ற  கொடியசைத்து தொடங்கி வைத்தார்....‌


உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நத்தாமூர் உட்பட 6 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கொடியசைத்து இயக்கி பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்....‌

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கும், நத்தாமூர், ஆலடி, அலங்கிரி, கூவாடு உள்ளிட்ட 6 கிராமங்களுக்கான வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்கம் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் இதில் திமுக நிர்வாகிகள் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் விமல்ராஜ் மற்றும் தொமுச நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்