தைவான் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நாட்டின் தென் கிழக்கே தைதுங் கடலோர கவுண்டி பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.
மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியது. ஆனால் இதில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்...