கலைஞரால் துவக்கப்பட்ட ஆலங்குளம் சிமெண்ட் ஆலை! திமுக ஆட்சியிலேயே மூடப்படும் அவலம்!
30 June 2025
திமுக ஆட்சியில் கலைஞரால் துவக்கப்பட்ட ஆலங்குளம் சிமெண்ட் ஆலை! திமுக ஆட்சியிலேயே மூடப்படும் அவலம்!
விருதுநகர் மாவட்டத்தின் அடையாளமாக கடந்த 1968 ஆம் ஆண்டு ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை துவக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு. கருணாநிதியால் துவக்கப்பட்டு பல ஆண்டு காலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. இப்பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்பு கற்கள் இன்னும் 170 ஆண்டுகளுக்கு மேல் சிமெண்ட் அரவைக்காக தோண்டி எடுக்க கூடிய அளவிற்கு வளம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை படிப்படியாக தேய்ந்து தனியார் சிமெண்ட் ஆலைகளுடன் ஈடு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, தற்போது ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிமெண்ட் ஆலை ஈரப்பத முறையில் உள்ள எந்திரங்களை உலர் பதன முறைக்கு மாற்றி செயல்படுத்துவதற்கு கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது ரூ.110- கோடி அறிவிக்கப்பட்டது. அப்போது இந் மாவட்டத்திற்கு என இரண்டு அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் இதுவரை அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. பின்னர் திமுக ஆட்சியின் போதும் இந்த ஆலையை நவீனப்படுத்தி சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியும் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் விருந்தினர் மாவட்டத்திற்கான இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆலை இயங்காத அளவிற்கு ஆலை இயக்கத்தை நிறுத்துவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வந்தன.
இதற்காக ஆலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு இதுவரையிலும் பல்வேறு நடவடிக்கை எடுத்ததின் பயனாக ஆலை இயக்கம் நிறுத்தப்படாமல் இன்றுவரை தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது.
தவிர ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்யாத நிலையில் பலர் ஓய்வு பெற்று, பலர் வேலையை விட்டு போய் விட்டார்கள்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டான்செம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி எந்த ஒரு வசதியும் செய்யாமல் தற்போது இப்பள்ளி மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளை நாடி செல்லும் அளவிற்கு எந்த ஒரு வசதியுடன் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பணியாற்றும் ஆசிரியைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இந்த பள்ளியையும் முறையாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலங்குளம் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தி விரைவில் ஆலையை புதுப்பித்து, முன்பு போல் ஆலையை சிறப்பாக நடத்துவதற்கு வழிவகை செய்வதற்கான ஏற்பாடுகளை ஆலை பாதுகாப்பிற்கு கமிட்டி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மனது வைத்தால் இந்த ஆலையை சீரும் சிறப்புமாக செயல்படுத்தி புதுப்பித்து பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்பது இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவின் முதல் சிமென்ட் ஆலை !
"ஆலங்குளம் சிமென்ட் ஒர்க்ஸ்
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில், ஈரமான செயல்முறை தொழில்நுட்பம் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலையை TIDCO நிறுவியது. இது பொதுத்துறையின் கீழ் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் சிமென்ட் ஆலை ஆகும், மேலும் இது 1970 இல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது. 1976 இல் TANCEM நிறுவப்பட்டபோது, அது TIDCO விடம் இருந்து ஆலங்குளம் சிமென்ட் ஆலையை எடுத்துக் கொண்டது. இந்த ஆலை தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது மற்றும் முக்கியமாக ARASU பிராண்டின் கீழ் PPC ஐ உற்பத்தி செய்கிறது. இந்த ஆலை முதன்மையாக அரசுத் துறைகளுக்கு சிமென்ட்டை வழங்குகிறது. இந்த ஆலை திறந்த சந்தை விற்பனைக்காக பரந்த அளவிலான ஸ்டாக்கிஸ்டுகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் சிமென்ட்டை விற்பனை செய்கிறது.
அரியலூர் சிமென்ட் ஒர்க்ஸ்
0.5 MTPA ஆலை:
TANCEM இன் இரண்டாவது சிமென்ட் ஆலை 1979 இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. இது ஆண்டுக்கு 5 லட்சம் டன் உற்பத்தி செய்யும் ஆலை மற்றும் உலர் செயல்முறை தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்கிறது. இது ARASU பிராண்டின் கீழ் OPC 43 கிரேடு & PPC ஐ உற்பத்தி செய்கிறது.