சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்த பாரில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தினால் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.