இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்று சாதனை!
15 June 2025
உலகக் கோப்பை போட்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்று சாதனை!
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 126 பேர் களம் கண்டனர்.
இந்திய வீராங்கனை சுருச்சி சிங் டாப் 8 இடங்களில் தானும் ஒருவராக களத்தில் நின்றார். 588-வது புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றார். இதைத்தொடர்ந்து 8 வீராங்கனைகள் இடையே இறுதிச்சுற்று நடந்தது.
கடைசி இரு ஷாட்டில் துல்லியமாக இலக்கை சுட்டு நிறைய புள்ளிகள் எடுத்தால் மட்டுமே தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நிலைமையில் சுருச்சி 23- வது ரவுண்டில் 10.5 புள்ளியும் கடைசி ரவுண்டில் 9.5புள்ளியும் எடுத்தார். அதே நேரத்தில் கடைசி இரு ரவுண்டுகளில் தடுமாறிய ஜெட்லி சவுஸ்கி 9.5 மற்றும் 9.8 புள்ளிகள் வீதமே எடுத்தார். இதனால் நூலிழை வித்தியாசத்தில் அவரை முந்திய சுருச்சி தங்கப்பதகத்தை சொந்தம் ஆக்கினார் சுருச்சி 241.9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.
ஜெட்ஸிஜெவ்ஸ்கி 241.5 புள்ளிகள் எடுத்து வெள்ளி பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. சீனாவின் கியான்சன் யாவ் 221.7 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றார்.
அரியானாவைச் சேர்ந்த 19 வயதான சுருச்சி எடுத்த தங்கத்தை சேர்த்து, நடப்பு தொடரில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.