மெக்காவில் நடந்த பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்களை சவுதியிலேயே அடக்கம் செய்ய தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது.. மேலும் ஒரு குடும்பத்தினருக்கு தல நான்கு பேரை அரசு செலவில் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பங்களுக்கு தெலுங்கானா அரசு தலா 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது...