பைக்கில் மணல் கடத்தியவர் கைது
12 November 2025
விழுப்புரம் அருகே பைக்கில் மணல் கடத்தியவர் கைது
விழுப்புரம் தாலுகா போலீசார் பிடாகம் குச்சிபாளையம் தென்பெண்னையாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பைக்கில் சாக்கு முட்டையில் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்