தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் - மஞ்சள் எச்சரிக்கை

15 October 2025

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.