குமராட்சி மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது

18 October 2025

குமராட்சி மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமராட்சி தீயணைப்பு துறையினறால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது .
 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக வருகின்ற தீபாவளி பண்டிகையினை விபத்தில்லா தீபாவளி பண்டிகையாக கொண்டாடுவதற்காக குமராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு குமராட்சி தீயணைமைப்பு நிலைய அலுவலர்  முரளி தலைமையில்  அவர்களது குழுவினரால் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் மற்றும் ஏணைய ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு கொற்றவை செய்திகளுக்காக செய்தியாளர்
P ஜெகதீசன்