கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்தில் 100 நாள் பணியின் போது, பணியாட்களை கதண்டு வண்டு கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை இன்று கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.