குடியரசு தின விழா: டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

26 January 2026

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, புதுடெல்லி கடமைப் பாதையில் (Kartavya Path) ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


முன்னதாக, விழாவின் தலைமை விருந்தினரான பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, இந்தியாவின் ராணுவ வலிமையையும் கலாசாரப் பெருமையையும் பறைசாற்றும் கண்கவர் அணிவகுப்புகள் நடைபெற்றன.