எந்தக் கட்சியுடன் கூட்டணி?
13 June 2025
கடலூரில் நடக்கும் மாநாடு பதில் சொல்லும்..... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதைக்கு இல்லை என்று முடிவாகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து கேட்க நிருபர்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்தனர்.
ஆனாலும் பிடி கொடுக்காத பிரேமலதா விஜயகாந்த் வருகின்ற 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா பதவி எங்களுக்கு கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளனர். அரசியலில் பொறுமை முக்கியம்... பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று சொல்வார்கள்.
அதேவேளை கூட்டணி எந்த கட்சியோடு என்பது குறித்து கூற கால அவகாசம் உள்ளது. தற்போதைக்கு எங்கள் கவனம் ஜனவரியில் கடலூரில் நடக்கவுள்ள தேமுதிக மாநாட்டினை சிறப்பாக நடத்துவதே! என்று பொருள்பட குறிப்பிட்டார்.