மக்களவையில் வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி இன்று பேசிய போது சுதந்திர போராட்டத்தின் அடையாளமாகவே வந்தே மாதரம் திகழ்கிறது. மேலும் காங்கிரஸ் மாநாட்டில் தான் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டது.. பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார் ஆனால் அதில் உண்மை இல்லை என்று தெரிவித்த பிரியங்கா காந்தி முன்னுக்கு பின் முரணாக உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்து தந்த அடித்தளம் தான் காரணம் என தெரிவித்தார். ஆனால் நேரம் குறித்து குறை கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்த பிரியங்கா காந்தி கடந்த காலம் குறித்து பேசி பாஜக அரசியல் செய்கிறது நாட்டின் வளர்ச்சி குறித்த எதிர்கால இலக்குகள் பாஜகவிடம் இல்லை என்றும் தெரிவித்தார்...