திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே செங்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் மதகில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் சிக்கி இருந்தது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் வெள்ளகோவில் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோத்து பட்டியான் தோட்டத் தைச் சேர்ந்த செந்தில்குமார் என்ப வரின் மனைவி மகேஸ்வரி (வயது 35) என்று தெரிய வந்தது இவர் களுக்கு கனிஷ்காஸ்ரீ (3)பெண் குழந்தை உள்ளது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது
இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட மகேஸ்வரி தனது மகள் கனிஷ்கா ஸ்ரீயுடன் தனது தாய் வீடான சூலூர் வேலப்பநாயக்கன் பாளையம் பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்றதாக தெரிகிறது ஆனால் அவர் தனது தாய் வீட்டுக்கு செல்லாமல் சுல்தான்பேட்டை அருகில் செல்லும் பிஏபி கால்வாய் வாய்க்காலுக்கு வந்தார். ஸ்கூட்டரை வாய்க்கால் கரையில் நிறுத்திவிட்டு வாய்க்காலில் குதித்துள்ளார் இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரிய வந்தது
ஆனால் அவரது குழந்தை கனிஷ்கா ஸ்ரீ என்ன ஆனது என்று தெரியவில்லை இது தொடர்பாக தொடர் ந்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்