திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

05 December 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டோம் இரண்டாவது நாளாக நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நைனார் நாகேந்திரன் உட்பட பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை நாடாளுமன்றத்தில் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....