முகப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்.
அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மற்றும மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏ.டி.எம் எந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு,வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.அவ்வகையில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.