கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் ரபிதீன் (வயது.45) இவரின் மனைவி சுமையா.
ரபிதீன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் ரிஸ்வான்.(13) அந்தப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10.ம் வகுப்பு படித்து வருகிறார்.
5-11.2025 மாலை பள்ளியில் இருந்து விட்டுக்கு வந்த இவர் தன் தங்கையுடன் சேலையில் தொட்டில் கட்டி இருவரும் விளையாடி உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் அப்போது வீட்டில் யாருமில்லை. இருவரும் தொட்டிலில் அமர்ந்து மகிழ்சியாக விளையாடிக் கொண்டுருந்தனர். பிறகு ரிஸ்வான் மட்டும் தொட்டிலில் அமர்ந்து ஆடினார். அப்போது அவர் வேகமாக தொட்டிலை வேகமாக சுற்றியதாக தெரிகிறது. இதில் எதிர்பாரத விதமாக சேலை அவருடைய கழுத்தை இருக்கியுள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமானார். இதைப்பார்த்து அதிரிச்சியடைய அவருடைய தங்கை பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு விரைந்து வந்து ரிஸ்வானை மீட்டு கோவை அரசு மருத்துவமனை க்கு, கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்க்கனவே ரிஸ்வான் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கரும்புக் கடை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலை கழுத்தை இருக்கி 13.வயது சிறுவன் இறந்த செய்தியால் கரும்புக்கடைபகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
மா.ஜாபர்அலி
செய்தியாளர் திருப்பூர்