மணிப்பூரில் பீரங்கி மற்றும் வெடிபொருட்களுடன் 3 பயங்கரவாதிகள் கைது

30 January 2026

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நேற்று தப்பியோடிய மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான பீரங்கி, ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த அபாயகரமான வெடிபொருட்களை, இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குக் கொண்டு சென்ற பாதுகாப்புப் படையினர், அங்கு அவற்றை பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்தனர்.


இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.