மகாராஷ்டிரம் மாநிலம் பீட் மாவட்டத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான தீயணைப்பு படை வாகனம் இன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதியினர் மற்றும் அவருடைய மகள் உட்பட ஏழு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...