ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!

15 June 2025

கர்நாடகாவில் புதிய அம்சங்களுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!



கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு விதான சௌதாவில் முதல்வர் சித்தாராமைய்யா தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக 90 நாள்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், ஜாதி ரீதியில் மட்டும் அல்லாது புதிய அம்சங்களாக சமூக- கல்வி நிலை குறித்தும் அந்தக் கணக்கெடுப்பில் விவரங்கள் சேரிக்கப்படும் என்றும் முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார். இதே முறை தமிழ்நாட்டில் எதிரொலிக்குமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.