தலைமை ஆசிரியரைக் கண்டித்து இருளர் சமுதாய பெண்கள் தர்ணா!
14 June 2025
ஸ்ரீ பெரும் புதூர்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து இருளர் சமுதாய பெண்கள் தர்ணா!
ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இருளர் இனத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவியை தரக்குறைவாக பேசியதாக அப்பகுதி இருளர் பிரிவு மக்கள் அப்பள்ளியின் முன்பு சாலையில் வாகனங்களை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது மாற்றுச் சான்றிதழ் கோரிக்கை வைத்த எட்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர்களை தகாத வார்த்தையில் திட்டிய பள்ளி தலைமையாசிரியரைக் கண்டித்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 பேர் மாணவிக்கு ஆதரவாக ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு வாகன சாலையில் அமர்ந்து உரிமை போராட்டம் நடத்தியது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
விஷயமறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து உங்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய முறையில் கூறி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறினர்.
அதன் பின்பும் அசைந்து கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல் துறையினர்ம வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.