அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசை செலுத்தும் என்று கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை. எனவே உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்...