சரக்கு விமானம் தரையில் விழுந்த விபத்து

05 November 2025

அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லூயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொன்னேலுலு நகருக்கு இன்று புறப்பட்ட சரக்கு விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.