இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 31 மீனவர்களையும் அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் அவர்களது நாட்டு படையினையும் சிறை பிடித்துள்ளனர். இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழக மீனவ சமூகத்தினர் இடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.