ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மூன்று மீனவர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இலங்கை கடற்படையினர் அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....