திருப்பூரில் அதிமுக ஆர்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

23 November 2025

அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்.


அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாநகராட்சியில் 25 நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் 3 உலர் கழிவு மீட்பு மையங்கள் நிறுவ ப்பட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து செயல் பட்டுக் கொண்டிருந்தன. இந்த மையங்களை முற்றிலுமாக முடக்கி வைத்து தற்போது ஒவ்வொரு வார்டிலும் தன் கணக்கில் குவிந் துள்ள குப்பைகளை அகற்றாமல் டாலர் சிட்டி என்ற பெயர் மாறி, குப்பை நகரமாக மாறி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேட்டின் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. 

நிலைமை இவ்வாறு இருக்கையில் முன் தேதியிட்டு குப்பை வரியை 150 சதவீதம் உயர்த்தியதோடு குப் பைகளை தரம் பிரித்து வழங்காத வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ 50 அபராதம் விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திருப்பூர் 4-வது கூட்டு குடிநீர் (மேட்டுப்பாளையம் குடிநீர்) திட்ட த்தை அரசியல் கால்புணர்ச்சி யோடு முடக்கி மாநகர மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காத அவல நிலையை ஏற்படுத்தி உள்ள திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நாடாளு மன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனை வரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறப்பு 

தீவிர வாக்காளர் திருத்த பணி களில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில்
 ஈடுபடுவதை கண்டும் காணா மலும் இருந்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 

25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் திருப்பூர் குமரன் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபா ரிகள் பல்வேறு தரப்பட்ட தொழிலா ளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 

மா.ஜாபர் அலி செய்தியாளர்
திருப்பூர்