திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் ரயில் நிலையம் நடைமேடை எண் 2ல் அடையாளம் தெரியாத சுமார் 65 வயதுமிக்க முதியவர் ஒருவர் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பயணிகள் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தில் தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளர். தூய மணி வெள்ளைச்சாமி, சிறப்பு சார்பு மணிகண்டன் மற்றும் காவலர்கள் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார் என்று தெரியாத நிலையில் அவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் உள்ளவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.